கவிதைமணி

சுனாமி சுவடுகள்: இணுவையூர் வ-க-பரமநாதன்

கவிதைமணி
செத்துப்  போனோர் பலநூறு            சிதைந்து போன பலவூருசொத்தும் சுகமும் போயொழியத்            துன்பம் மட்டும் நிறைந்திருக்கும்கொத்துக் கொத்தாய்ப் பலவுயிகள்            கொண்டு போன சுனாமியதன்கத்து மோசைச் சுவடுமட்டும்            காதில் வந்து மோதிநிற்கே!தந்தை தாயைத் பறித்தெடுத்துத்            தரணி யிதிலே வாடவிட்டுச்சொந்த பந்த மேதுமின்றிச்            சூழும் துயரில் தான்கிடத்திவிந்தை யுலகில் நடைப்பிணமாய்            விழிபி துங்கி யலையவைத்தஅந்தச் சுனாமிச் சுவடுகளோ            அழிய வில்லை நெஞ்சினுள்ளே!தேடி வைத்த பொருளனைத்தும்            தின்று சுனாமி போனதினால்ஓடி வந்தே உதவினோரும்            உடனி ருப்போம் என்றுரைத்துநாடி வந்த நல்லரசும்            நகர்ந்து மெல்லக் கைவிடவும்கோடி யிடர்கள் சுவடுகளாய்க்            கொண்டே வாழ்ந்து சாகிறாரே!அலைக ளாடும் கடலோரம்            அனைத்தும் அழிந்து போனதுவும்விலையே யில்லா இன்னுயிர்கள்            விழுங்கி மீண்டு போனதுவும்வலையே வாழ்வாய்க் கொண்டோரை            வதைத்தே வாழ  வைத்ததுவும்நிலையாய் மறையாச் சுவடுகளாய்            நிற்க வைத்த சுனாமியாமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

பிளடி ரோமியா! சமையல்காரர் டூ கேங்ஸ்டர் நானி!

SCROLL FOR NEXT