முகப்பு
கவிதைமணி

பட்டாசு சத்தம்: கவிஞர். கு. நா. கவின்முருகு.

Updated On : 1 நவம்பர், 2016 at 3:58 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:06 AM
தீபங்கள் ஏற்றிடுவோம்; இந்நாள் தன்னில்    தீவினையாம் இருளகற்றி ஒளியே ஓங்க!சாபங்க ளென்போமே நாட்டின் தீயோர்   சதைக்காக ஊறிடுவார் மிருகத் தோலில்!ஆபத்தாம் இவர்களாலே பெண்க ளுக்கே   அரிதார ஒப்பனையில் நல்லார் போலே!கோபத்தால் கொன்றிடுவர் காமத் தாளே;   கொடுமைதனை விரட்டிடுவோம் தீப மேற்றி!விழித்திடுவோம் கல்லாமை யிருள கற்றி!    மீட்டிடுவோம் சமூகத்தின் வளர்ச்சி யீட்டி!மொழிந்திடுவோம் தமிழ்மொழியை நாவி னிக்க!    மூத்தமொழித் தேசியமாய் தரணி யாளா!அழியாத கனவுகளாய் நெஞ்சி லேந்தி   ஆளுமொழி தமிழென்றே கவிதைக் கொஞ்சி!செழித்திடுவோம் தமிழாலே என்றும் நாமே   தீபத்தை யேற்றியேநாம் உறுதி கொண்டு!ஆயுதமி லாததேசம் காணச் செய்வோம்   ஆலயங்கள் தொழுதிட்டால் அன்பு ஓங்கும்தாயுணர்வாய் நேசிக்க கற்போம் நாளும்    சாதிமத பேதங்க ளற்றே வாழசாயுமிங்கே கொடியவர்கள் சாதிப் போக்கு   சரித்திரங்கள் எழுதட்டும் ஒழிந்த தென்றேபாயுமிங்கே வெடிகளாக சட்டம்; யாரும்   பாய்ச்சலாக நற்சமூகம் காணச் செய்வோம்வன்முறைகள் அழித்திடுவோம் அமைதி காண    வன்கொடுமை யில்லாத தேசம் காணதன்னடக்கம் போதுமினி எழுக தீயாய்    சாதிக்க பிறந்தவனே தமிழன் என்போம்வென்றிடுவான் புரட்சியாளே நாட்டை வீட்டை   மேன்மையோடு  நன்மைகாண நாட்டி னோடுஎன்னென்று செப்பிடுவேன் நலனே பேண   இந்நாளில் பட்டாசு சத்தம் போலே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.