பட்டாசு சத்தம்: பொன். குமார்
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:06 AM
பயிர் காக்க போராடும்
விவசாயிகளின் குரலைக்
கேட்காமல் செய்து விடுகிறது
பட்டாசு சத்தம்.
உரிமைக்காக போராடும்
தொழிலாளர்களின் குரலை
ஒலிக்காமல் செய்து விடுகிறது
பட்டாசு சத்தம்.
மாநில முன்னேற்றத்திற்கு
மத்தியை நோக்கிய
தமிழர்களின் குரலைக்
காணாமல் செய்து விடுகிறது
பட்டாசு சத்தம்.
Advertisement
பசிக்காக ஏந்தி வாழும்
பிச்சைக் கார ர்களின் குரலை
அடக்கி விடுகிறது
பட்டாசு சத்தம்.
வெடித்தால் விபத்துண்டாகுமென
வேண்டுகோள் வைப்போரின்
கோரிக்கைக் குரலை
கேளிக்கையாகி விட்டது
பட்டாசு சத்தம்.
பட்டாசு சத்தத்தில்
காணாமல் போயின
பல குரல்கள்.