முகப்பு
கவிதைமணி

பட்டாசு சத்தம்: ம. அஹமது நவ்ரோஸ் பேகம்

Updated On : 1 நவம்பர், 2016 at 3:40 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:06 AM

பட பட படார் என்ற சத்தம் 
தெருப் பையன்கள்  கைகளில் கம்பி மத்தாப்பு,
முகங்களில் வெற்றிக் களிப்பு.

பயத்தில் தொண்டைக் குழிக்குள் 
இருந்து சத்தம் வந்தது வயது போனவர்களுக்கு.
முதுமைக்கோடுகளுடன் கோபக் கோடுகளும்  
முகத்தில் தோன்ற வசவு மழை பொழிந்தனர்.
அசராமல் அடுத்ததைப் பற்ற வைத்தனர், பையன்கள்.

தெருவில் தெறித்து விழுந்த தீச்சிதறல்கள் கண்டு 
அஞ்சி, தெருவோரம் அண்டினர் குமரிப் பெண்கள்.
இன்னுமொன்று வெடிப்பதற்குள் காதுகளைப் 
பொத்திக் கொண்டு ஓடிச் சென்று 
தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்தனர்.

Advertisement

பட்டாசு சத்தம் அடங்கியும்,
அடங்காத நெடியும் புகையும் 
வருவோர் போவோர் சுவாசப் பைகளுக்குள் 
பாதுகாப்பாக அடங்கின.

கேடென்று தெரிந்தும் தவிர்க்க முடியாமல் 
குழந்தைகளின் சந்தோஷத்திற்காக நாம் 
விடாமல் பற்றிக்  கொண்டிருக்கும் 
விஷயங்களுள், பட்டாசும் ஒன்று.

முடிந்த வரை பட்டாசு சத்தம் குறைப்பதால்  
ஒலி மாசு, புகை மாசு குறைத்து காற்றையும் 
நம் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.