கவிதைமணி

ஜன்னல் நிலா: பூ. சுப்ரமணியன்,

கவிதைமணி
கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவியும் பாடியது அன்று  கவிஞர் வீட்டு ஜன்னல் நிலவும்கவிஞருடன் கவிதைபாடி மகிழ்ந்தது இன்று.அன்னை நிலாவைக் காட்டிகுழந்தைக்கு அமுதூட்டினாள்குழந்தையோ கைதட்டி சிரித்ததுஜன்னல் நிலாவைப் பார்த்து.விண்ணில் தவழ்ந்து வரும்கண்சிமிட்டும் வெண்ணிலாமண் குடிசை ஜன்னல் வழியேபுன்னகையுடன் எட்டிப்பார்த்தது!கண்சிமிட்டும் ஜன்னல் நிலாமண் குடிசை வீட்டைஎட்டிப் பார்க்கும் ஏழை வீட்டு கட்டணமில்லா மின்விளக்கு !ஓவியன் கைத் தூரிகையில்கவிஞர் பாடிய பாடலில்சிரிக்கும் வெண்ணிலாசிக்கியது ஜன்னல் நிலாவாகஎடுப்பான வெண்ணிலாஜன்னலுக்கு வெளியேதுடுப்பில்லாப் படகுபோல்  பிறை நிலாவாக சிரித்தது !ஜொலிக்கும் வெள்ளித்தட்டைஜன்னலுக்கு வெளியேவிண்ணில் வீசியது யார் ? !கவிஞர் கவிதையில் நிலவைக்கேட்டு உள்ளம் மகிழ்ந்தான் !வீட்டில் அடைபட்டக் காதலன்காதலியின் முகம் காண  காதலில் ஏங்கி நின்றான்ஜன்னல் நிலாவில் காதலி  முகம் கண்டு மகிழ்ந்தான் !                              

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT