நெல்லுக்கிறைத்த நீர்: வ. மாரிசுப்பிரமணியன்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:42 PM
நெல்லுக்கிறைத்த நீர்
புல்லுக்கும் உதவிடும்
புழுவிற்கும் உதவிடும் --- அது போல,
மெய் சொல்லுக்கு இருக்கின்ற மதிப்பும்,
என்றுமே எங்குமே சென்றிடும், வென்றிடும்,
முடிவதில் என்றுமே எங்குமே உண்மையே வென்றிடும்,
நிலையாக என்றுமே எங்குமே உண்மையே நின்றிடும்.
பதவிக்காக மல்லுக்கட்டும் மனிதனே
உதவிக்காக யார் வந்தாலும், பதவியால் உதவிடு.
நெல்லுக்கிறைத்த நீர் போல,
பலரையும் வாழ வழியிடு.
நீ நீயாகவேயிரு, சேவையில் என்றுமே எங்குமே நீராகவேயிரு…..