நெல்லுக்கிறைத்த நீர்: பா. சத்தியமோகன்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:42 PM
நெல்லுக்கு இறைத்த நீர்
ஆங்கே புல்லுக்கும்
பொசியுமாம்” என்பது
தமிழ்த்தாய் ஒளவை வாக்கு ; ஆம்!
பெரியநலன் கருதி செய்யும் செயல்
நலன்
எளியவர்களுக்கும் கிடைக்கும்
என்பதாம்;
தானே எல்லா நீரையும்
குடித்துவிடாமல்
புல்லின் மீதும் கருணை
காட்டுகிறது நெல்பயிர்
என்பதாம்;
டம்பளர் அளவு நீர் வேணுமெனில்
கிணற்றில் டம்பளர் கட்டி
இழுப்பதில்லை
வாளி கட்டித்தான்
இறைக்கின்றோம் என்பதாம்;
தேங்காய் அளவு நன்மை
செய்தால்தான்
எலுமிச்சை அளவாவது போய்ச்
சேரும் என்பதாம்;
ஆதலினால்
பெண் இனத்திற்கு ஆண் செய்யும்
சிறிய நன்மை எவை எவை என ஆராய்ந்து
அவற்றையெல்லாம் பெரிது பெரிதாக
மாற்றும் குணம் பெறுவோம்
அதன்பின்பு
எதுவுமே விழலுக்கு இறைத்த
நீராகாது
சமூக வெற்றிக்கு விதைத்த
விதையென்றே ஆகுமாம்