நெல்லுக் கிறைத்தநீர்: ஆர்.அருண்குமார்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:42 PM
ஆனந்தம் நிறைந்திடும்!
செய்வனயாவும் சிறப்பாக இருப்பின்
சிர்மிகு வெற்றி நிச்சயம் கிட்டும்.
பொய்யுரை பரப்பினால் பாதகம்
போகாத ஊருக்கு வழி காட்டும்.
நல்லது செய்தால் நலமே கிட்டும்
நானிலம் போற்றிடும் நிச்சயம்.
அல்லது செய்வாருக்கு இன்னல்தான்
அசையாத சொத்தாகும் கேளாய்.
விளையாத நிலத்தில் நீரிறைத்தால்
வீணருக்கு உதவுதல் போலாகும்.
நெல்லுக்கு நீர் இறைத்தால்தான்
நிறைந்திடும் விளைச்சல் நிறைவாய்.
பொருளறிந்து பேசினால் இன்பமே
புரியாவிடில் விழலுக்கு இறைத் நீரே.
அருள்நிறைந்த மனதில் அன்புதந்தால்
ஆனந்தம் நிறைந்திடும் வாழ்க்கையில்.