என் ஓட்டம் என் இலக்கு: சசி எழில்மணி
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:45 PM
இரவுபகல் பாராமல்
இகழ்வார்ச்சொல் கேளாமல்
கடமையில் கண்கொண்டு
கருத்தினில் தெளிவுகொண்டு
மெய்விட் டுயிர்தான்
ஓடியே போனாலும்
மேதினில் நிலைக்க
மக்கள் மனங்களில் வசிக்க
எத்தனை தடைகள் எதிர்வந்தாலும்
நீரின் திசையில்
எதிர்த்து நீந்தும் மீன்கள் போல்
தடைகள் பலதாண்டி
கடல் சேரும் நதிபோல
ஓடிக்கொண்டே இருக்கின்றேன்
புகழ் எனும் இலக்கை நோக்கி..!