கவிதைமணி

சூரிய தாகம்: ரெத்தின.ஆத்மநாதன்

கவிதைமணி

சூரியனே!
இப் புவியின் நாயகனே!
உனக்குத் தான் ஏன்
இவ்வளவு தாகம்?

ஓ!
அரசியல்வாதிகளும்...
அதிகாரிகளும்...
நீதி...நேர்மை...
மறந்ததால்தான்...
உன் தாகம் 
எல்லை மீறிப் போனதோ?

எங்கள் இதய நாயகனே!
உன் தாகத்திற்கு நீ...
ஏரிகள்...
ஆறுகள்...
குளங்கள்...
குட்டைகள்...
என்று எல்லா நீர்நிலைகளையும்
முழுதாய் உறிஞ்சி விட்டாய்!

பூமியில்  இப்பொழுது...
புல்...பூண்டுகள் முதல்...
ஊர்வன...நடப்பன...
ஓடுவன...பறப்பன...
அத்தனையும் நீருக்கு 
ஆலாய்ப் பறக்கின்றன!

எங்கள்...
அரசியல்வாதிகள்...
அதிகாரிகள் ...
போல் அல்லாது...
நீயாவது மனமிறங்கு!
உடனடியாக...
மழையை அனுப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்தாம் வகுப்பு: தனித் தோ்வா்களுக்கு இன்று முதல் செய்முறைத் தோ்வு

கமல்ஹாசன் பெயா், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

#t20wc | இந்தியா அரையிறுதி செல்ல இதெல்லாம் நடக்குமா? | T20 World Cup |

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT