வாய்க்கால் என்பது வரப்பாய் மாற ;
குட்டையும் குளங்களும் வறட்சியில் ஏங்க ;
ஏரிகளும் ஏக்கங்களில் பார்க்க ;
கடல் நீரோ ஆவியாய் போகுதே !
வியர்வையின் தாக்கம் மரங்களையும் வாட்டுதே ;
சட்டையை கழட்டுவதுபோல் பட்டையை உரிக்கிறதே ;
தாகத்தால் வாய்பிளந்த வயல்கள் -
அனல் காற்றில் ஆவி பறக்குதே !
கண்ணீரும் வருவதில்லை ;
கவலையில் நான் இருந்தும் !
ஈரப்பசை இல்லாமல் -
இறைஞ்சுகிறேன் இரு கை ஏந்தி !
கோடை மழையே வந்துவிடு !
கோபத்தையும் குறைத்துவிட்டு !
பாவமான எங்களுக்கும் -
பரிவையும் காட்டிவிட்டு !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.