கோடை மழையே நீதான் என்றும்
கொடை மழை என்பதில் ஐயமில்லை!
படை மிக க் கொண்ட மன்னரும்கூட
பரிதவித்துப் போவர் நீ வரவில்லையெனில்!
துளியாய் நீயும் முகத்தில் விழுகையில்
துயரங்கள் அனைத்தும் பறந்தே போகும்!
தாயின் வாயால் தன் இரை தேடும்
குஞ்சுகள் போலக் குவலயம் மகிழும்!
உன்னில் நனைந்தாலும் உன்னை நினைத்தாலும்
இதயம் முழுவதும் நிறையுது இன்பம்!
தினநாட்காட்டியில் தாளைக் கிழித்து
தினமொருமுறை நாட்களை யெண்ணி
தீபாவளியை அனுபவிக்கத் துடிக்கும்
சின்னக் குழந்தையின் மனத்தினைப்போல
நீ வரும் நாளை நினைந்தே மக்கள்
நித்தம் ஒருமுறை நாட்களை எண்ணுவர்!
வெட்கி மறுகும் புதுமணப் பெண்ணாய்
ஏனோ நீயும் சிலமுறை ஏமாற்றி விடுகிறாய்!
கறுப்பாய் இடிப்பாய் கண்கூச மின்னுவாய்
ஆனாலும் துளியாய் எம்மை ஆதரிக்க மாட்டாய்!
அடிக்கடி நீ பெய்து அண்டம் நிறைத்தால்
அண்டா குண்டாவெல்லாம் அமைதியாய் உறங்கும்!
பாசப் பிணைப்புகள் மேலும் இறுகும்
பல்வகையானும் உலகம் தழைக்கும்!
உந்தன் கடமை பெய்வதே என்பதை
ஒருபோதும் நீ மறந்து விடாதே!
உயிரை வளர்ப்பது மழையே நீதான்
உண்மை முழுதாய் கொஞ்சமும் மிகையிலை!
உலகம் வாழ்வது உன்னால் என்றும்
உதிரம் பெருகுவதும் உன்னால்தானே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.