கவிதைமணி

கோடை மழை: பூ.சுப்ரமணியன்

கவிதைமணி

வாடிய பயிர்கள்
நாடுவதோ பருவமழை
தாகம் தணிக்க 
தேடி அலையும் உயிர்கள்
நாடுவதோ கோடைமழை !

சூரிய வெப்பம் தணிந்து 
சுற்றிவரும் பூமியும்  
கொட்டும் கோடைமழையில்
குளுமை அடையும் !

இடிமுழக்கம் காணும்
கோடைமழை
வெடிப்பு காணும் நிலங்கள்
ஒட்ட வைக்கும் !

கொட்டும் கோடைமழை
வாடும் விவசாயிகள்
வேதனை நீக்கும்
தாகம் தணிக்கும் !

கோடைமழை பொழிந்து
குளுமை நிறைந்தால்
கொடைக்கானல் ஊட்டி
குளுமை தேடி
மக்கள் அலையமாட்டார் !

கோடைமழை
நம் வியர்வைத்துளிகளை
நலமுடன்
துடைக்கும் நீர்த்துளிகள் !

நடக்கும் யானைகள்
நிற்கும் மரங்கள்
ஓடும் மான்கள்
ஆடும் மயில்கள்
பாடும் குயில்கள்
பறக்கும் பறவைகள்
தாகம் தணிக்க
ஏங்கி அலையும்போது  
கோடைமழையே வருக
கருணை மழை பொழிக!                     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணி ஆட்சியா? - நயினார் நாகேந்திரன் சூசகம்!

”ரொம்ப அரிய தலைவர் நல்லகண்ணு!” நடிகர் கார்த்தி அஞ்சலி

சென்னையில் முகாமிடும் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர்! காரணம் என்ன?

சின்ன சின்ன டிப்ஸ்! உடலுக்கும் வீட்டுக்கும்!

சிறப்புக் காட்சியில் வரவேற்பைப் பெற்ற தாய் கிழவி..! பிரபலங்கள் பங்கேற்பு!

SCROLL FOR NEXT