கவிதைமணி

அரியாசனம்: -உத்ரன்

கவிதைமணி
அரியாசனமா?!
அது எனக்கு வேண்டாம ப்பா!
சரியாசனம் 
தந்தாலே போதும ப்பா!
அரியாசனத்தில் 
அமரும் பல பேர்...
நிம்மதி கெட்டு
நீள் துயில் கெட்டு
அமைதி கெட்டு
ஆளுமை கெட்டு
சுற்றம் கெட்டு 
சுகங்கள் கெட்டு 
எல்லாம் கெட்டு 
அவர்களும் கெட்டு
விட்டால் போதுமென்று 
விழுந்தடித்து ஓடுவதை
சரித்திரம் நன்றாய்
பதிவில் வைக்கும்!
அரியாசனத்துக்கு ஆசைப்பட்டு
தனியாசனம் இழந்தோர் கதைகள்
பலவும் இந்தப் பாரினில் உண்டு!
வேண்டாம் நமக்கு எந்த ஆசனமும்!
பறவைகள் போல...
தடம் ஏதும் பதிக்காமல்...
பறந்து வாழ்ந்து 
முடிப்போம் பிறவியை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

எங்கள் கூட்டணியில் ‘வெயிட் அண்டு சீ ’நிலைமைகள் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்ததராஜன்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

தொழில் வரி செலுத்தியதாக போலி ரசீது கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி: இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT