கவிதைமணி

மல்லுக்கட்டும்  ஜல்லிக் கட்டு : கே. நடராஜன்

கவிதைமணி

துள்ளி வரும் காளை ...அதை அடக்கும் 
துடிப்புடன்  களத்தில் இளம் காளையர் !

இது போர்க்களம் இல்லையே...ஒரு 
வீர விளையாட்டுக்களம்  தானே !

ஜல்லிக்கட்டு ...இந்த ஒரு பெயரே 
உசுப்பிவிடுமே  தூங்கும் இளைஞரை !

காளை மாட்டுடன் மல்லுக்கட்டிய  ஒரு 
வீரர் கூட்டம் இன்று ஜல்லிக்கட்டுக்காகவே 

மல்லுக்கட்டும் ஒரு அவலம் !  ஜல்லிக்கட்டு 
நடக்குமா நடக்காதா ..இந்த கேள்விக்குறி 
ஜல்லிக்கட்டுக்கு மாத்திரம் அல்ல ...ஒரு  

கூட்டத்தின் குறி நம் ஜல்லிக்கட்டு மாட்டின் மீதே !
ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதை 
படித்ததில்லையா நாம் ?  அதே கதைதான் 
மீண்டும் அரங்கேற்றம் இன்று  ஜல்லிக்கட்டில் !

ஜல்லிக்கட்டு மாட்டினத்தின் சந்ததிக்கு 
சத்தமில்லாமல் ஒரு முற்றுப்புள்ளி வைக்கத் 
துடிக்கிறது ஒரு கூட்டம் இன்று... அவர் 
ஆடும் ஆட்டம் ஒரு "சோதனை  ஓட்டம் " 
இன்று... கேட்கவே வேதனை நமக்கு !

சோதனை எது  வந்தாலும்  சாதிக்க வேண்டும் 
நாம் ! மல்லுக்கட்டி  மீட்க வேண்டியது வெறும் 
ஜல்லிக்கட்டு போட்டியை  மட்டுமல்ல !

நம்  ஜல்லிக்கட்டு மாட்டினத்தின் வாழ்வையும்  அதன்   
இன வளர்ச்சியையும்  சேர்த்துதான் !

மல்லுக்கட்டுவோம்  ஜல்லிக்கட்டுக்கு ...ஜெயித்துக் 
காட்டுவோம் இந்த  உலகுக்கு நாம் யார் என்று !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK

வினா - விடை வங்கி... சிந்துவெளி நாகரிகம்!

SCROLL FOR NEXT