கவிதைமணி

மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு:  -உத்ரன்,

கவிதைமணி
எதுவுமே சரியில்லை இங்கு எல்லாமே அபத்த மயம்!அரசுகள் அதிகாரிகள் அத்தனையும் ஊழல் மயம்!மக்கள்  நலம்  பேண  மருந்துக்கும்  யாருமில்லை!நேர்மையாளர்களுக்கு இங்கே நெஞ்சில் துணிவில்லை!கார்ப்பரேட்டுகளுக்கே கம்பளம் விரிக்கும் கழிசடைச் சட்டங்கள்!விவசாயிகளைக் கொன்றுபோடும் வீணான திட்டங்கள்!கொள்ளை அடிப்போரே இங்கு கொண்டாடப் படும் சிறுமை!நல்லோர்க்கு இங்கில்லை நனியளவும் உயர் பெருமை!ராணுவத்திலும் நுழைந்து விட்டது நாணயமற்றோர் கைவரிசை!சோற்றிலும் ஊழல் கையின் சுகமற்ற பெரு வரிசை!கர்நாடகமும் டெல்லி அரசும் கைகோர்த்து இங்கேஇருநூறு விவசாயிகளை எரித்தே போட்டது!... நீதி எங்கே?குற்றங்களுக்கும் கோர்ட்டுகளுக்கும் குறைவேயில்லை இங்கு!சமயத்தில் நீதி மட்டும் ஒளிந்து கொள்வது எங்கு?ஏழைகள் வாழ இந் நாட்டில் இல்லையே நல்ல இடம்!வல்லரசாவதெல்லாம் வார்த்தையில் படத்தில் மட்டும்!இந்த நிலையில் நீங்கள் ஜல்லிக்கட்டு மல்லுக்கட்டென்று வயிற்றெரிச்சலை ஏற்படுத்துவது வருத்தமே தருவதாகும்!மக்கள் நலம் பேணும் மகத்தான அரசு வந்தால் மல்லுக் கட்டாமலே ஜல்லிக்கட்டு மக்களை மகிழ்விக்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK

வினா - விடை வங்கி... சிந்துவெளி நாகரிகம்!

SCROLL FOR NEXT