கவிதைமணி

மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு:  ​- கோ. மன்றவாணன்

கவிதைமணி

மின்னும் கண்களில்
மிளகாய்ப் பொடிதூவி
மிரட்சியில் அலற வைக்கிறீர்கள்

முரட்டுத் தோல்தான் என்றாலும்
கோணி ஊசியால் குத்தி
ரத்த தரிசனம் காணுகிறீர்கள்

கழுநீர்ப் பானையில்ம
துநீர்க் கலந்து
வெறிகொள்ளச் செய்கிறீர்கள்

நுரைகக்கிச்
சுருண்டு விழும்போதும்
கருணையை மிதித்து
வீரக்கொடி ஏற்றுகிறீர்கள்

எங்களை
வதைப்பதால்தான்
தமிழ்ப்பண்பாடு தழைக்கும் என்றால்
உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்ற
மீசைக் கவிஞனின் மார்பை முட்டுங்கள்

அட..
ஜல்லிக்கட்டை ஆதரிக்கும்
உங்கள் தலைகளில்
நஞ்சு தடவிய கொம்புகள் முளைத்திருப்பதைத்
தடவிப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்
 

ஜல்லிக்கட்டில்
தமிழ்வீரம் பேசும் மாவீரர்களே…
தமிழ்ப்பெண்ணை மணக்கப்
புலியோடு போரிட்டுக்
கூர்ப்பற்களைக்
கொண்டு வாருங்கள்

பிரியாணி சாப்பிட்டபடி
மாடுகளுக்காக அழும் உங்களின்
அருட்பிரகாசத்தின் முன்
அணைந்துபோகலாம்
வள்ளலார் ஜோதி

நவீன நகரங்களை அமைத்தாலும்
உங்களைவிட்டுப் போகவில்லையே
காட்டுமிராண்டி வாழ்க்கை

நனிநாகரிகம் காண
ஜல்லிக்கட்டோடு சேர்த்துப்
பிரியாணிக் கடைகளையும் மூடுங்கள்

இப்படிக்கு
உங்கள் இதய வாயிலில்
ஆராய்ச்சி மணி அடிக்கும்
காளைகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK

வினா - விடை வங்கி... சிந்துவெளி நாகரிகம்!

SCROLL FOR NEXT