நீ கண் சிமிட்டினால்: ஆர்.வித்யா
சூரியன் கண் சிமிட்டினால்
கிரஹணக்காட்சி மறையாது மறையும்!
சந்திரன் கண் சிமிட்டினால்
வானில் மறையும் முதல் பிறை
மனசுக்குள் அசையும் !
நட்சத்திரம் கண்சிமிட்டினால்
கிருத்திகை கொண்டாட்டம் !
மேகம் கண் சிமிட்டினால்
வானவில் வளையும்!
மீன் கண்சிமிட்டினால்
முத்துக்கள் கொட்டும் !
மரங்கள் கண்சிமிட்டினால்
பூக்கள் மலரும்!
‘நீ’ கண் சிமிட்டினால்
எனக்கு மட்டும் வெளிச்சம் கிட்டும்!
‘நான்’ கண் சிமிட்டினால்
உலகத்துக்கே ஆணவம் பிடிக்கும்!
‘ நீயும் நானும்’ அகலட்டும்
வெளிச்சம் உலகை ஆளட்டும்!!