நீ கண் சிமிட்டினால்: கே.ஆர். கார்த்திகா
பூ கண் சிமிட்டினால் வாசமே கணக்கு! !
மேகம் கண்சிமிட்டினால் மழையே கணக்கு!
நிலம் கண் சிமிட்டினால் விளைச்சலே கணக்கு !
மரம் கண் சிமிட்டினால் கனிகளே கணக்கு!
வானம் கண் சிமிட்டினால் நட்சத்திரங்களே கணக்கு!
சூரியன் கண்சிமிட்டினால் நேரமே கணக்கு !
இளமை கண்மிட்டினால் வாலிபமே கணக்கு!
முதுமை கண்சிமிட்டினால் தனிமையே கணக்கு!
குழந்தையே ‘நீ கண் சிமிட்டினால்’
தாய்க்கு அது என்ன கணக்கு. . .
கணக்கு அல்ல கவிதை
கவிதையல்ல உயிர்!!