முகப்பு
கவிதைமணி

நீ கண் சிமிட்டினால்: கே.நடராஜன்

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:25 PM
பகிர்:

கண் சிமிட்டும் நேரத்தில் மின்னஞ்சல் பறக்கிறது 
கண்டம் விட்டு கண்டம் ! கண்சிமிட்டும் நேரத்தில் 
பணப் பரிமாற்றம் நம்  வீட்டிலிருந்தே ! கை பேசி 
செய்யுது மாயம் எல்லாம் ! இல்லை என்று 
சொல்லவில்லை நான் !

கை பேசி உன்னை கையில் வைத்து வேலை ஏதும் 
இல்லாமல் கண் சிமிட்டாமல் உன்னையே 
வெறித்து பார்க்குதே  ஒரு கூட்டம் ! 
 
அவர் வீட்டு குழந்தை அவரைப் பார்த்து 
கண் சிமிட்டி சிரிக்கும் சமயம் கூட 
இல்லையே சிரிப்பு அவர் முகத்தில் !

ஆனால் கைபேசி நீ கண் சிமிட்டினால் மட்டும் 
வருதே சிரிப்பு அவர் முகத்தில் !
அது என்ன மாயம் ? !!!

முழு கட்டுரையைப் படிக்க →