நீ கண் சிமிட்டினால்: பேராசிரியர் கவிஞர் பு மகேந்திரன்
தீ பற்றி எறியும்
மழை பொழியும்
மலை தகடு பொடியாகும்
ஆறுகள் தானே வரும்
மாடுகள் சுயமிழக்காமல் ஓடும்
நீ கண் சிமிட்டினால்
இவைகள் எல்லாம் நடக்கும்
நடப்பது நிஜமாகுமா என்பது தான் கேள்வி
வார்த்தைகள் மட்டுமே இங்கு முதலாகிறது
கோடிகளில் புரள்கிறாய்- பத்தவில்லை
மாடி- மாடி வீட்டைக் கட்டிக் கொண்டே இருகிறது.
வைக்க இடமில்லாமல்
வேறு வேறு என அலைகிறாய்.
வாயில் போட்டதெல்லாம் பத்தாது
எழுதி வைத்ததையும்
மறைக்க-
மெல்ல வைக்கிறாய்.
கல் எல்லாம்
நீ சிமிட்டினால் பொன்னாகிறது
உடல் எல்லாம்
நீ சிமிட்டினால் பிணமாகிறது
நீயே ராஜாவாகிறாய்
நீயே கையில் கொலைவாள் எடுத்துக்
கொலையும் செய்கிறாய்.
நீயே நீயே எல்லாம்
சாதித்தாய் நீ உன் சிமிட்டல்களில்