முகப்பு
கவிதைமணி

தனிமையோடு பேசுங்கள்: பெருமழை விஜய்

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:24 PM
பகிர்:

நெருங்கிய உறவுகள்
நேசம்     காட்ட...
பழகிய  நட்புகள்
பாசம்  பொழிய...
உயிரினும் மேலாய்
உள்ளோர் நெகிழ...
அனைத்தையும் மனது
அமைதியாய் ஒதுக்கி...
தனக்குத்  தானே...
தன்  மனசுடனே...
பேசிடும்  உறவே...
பெருமை மிக்கது!

வாழ்க்கை இனியது
வளமாய் வாழ்ந்தால்!
உறவுகள்  நல்லவை
உண்மையாய் இருந்தால்!
பெருமைகள் பேசும்
பெரியவர்கள் என்றும்
மனசாட்சிப்  படி
நடப்பது  அரிது!

தனிமையுடன் உறவாடும்
தகைமை உயர்ந்தால்
தன்னிலை பிடிபடும்
தவறுகள் குறைந்திடும்!

முழு கட்டுரையைப் படிக்க →