முகப்பு
கவிதைமணி

தனிமையோடு பேசுங்கள்:   இரா.வெங்கடேஷ்

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:24 PM
பகிர்:

ஆறாத காயங்களின் 
ஆறுதலுக்கு 
தனிமையோடு பேசுங்கள் 

தளிர்க்கும் நம் 
திறமையெல்லாம்
திறம்பட, 

தவிர்க்கும் நம் 
இன்னல்களெல்லாம்,
சூரியன் கண்ட
பனிபோல், 

பெருக்கும் நம் 
இனிமைகளெல்லாம் 
இன்பத்தை பகிரும்போது 
பெருகும் சந்தோஷம்போல்,

விரிக்கும் நம் 
சிந்தைனைகளெல்லாம் 
அகண்ட வெளிதனில் 
பிரபஞ்சமாக, 

தன்னிகரில்லா 
தன்னையே காண 
தனிமையோடு பேசுங்கள் 

முழு கட்டுரையைப் படிக்க →