ஒருமுறையேனும்: ஆர்.அருண்குமார்
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:33 PM
எத்தனையோ கனவுகள் மனதுக்குள்அத்தனையும் பலிக்கவில்லை.வித்தகனாக வேண்டும் என்றகனவுபித்தனாக அலையவைத்தது.நல்லவனாக வேண்டுமென்ற நனவுமெல்லவே மாறிப்போனது.வல்லவனாக நினைத்தபோதில்சொல்லமுடியா வேதனை தந்தது.நாட்டைத் திருத்த எண்ணிய மனமோ வேட்டை நாயாய் திரிய வைத்தது.கோட்டை கட்ட போராடியபோதுபோட்ட திட்டமெல்லாம் மறைந்தது.உண்மையைக் கூறினால் உலகமோஅண்மையில் வராதே என்றது.வண்ணமாய் ஒளிர்ந்தபோதுஎண்ணமோ அலைபாய்ந்தது.ஒருமுறையேனும் நினைத்தபடிஉள்ளம் மாறவேண்டும்.மறுமுறையாவது மனமெல்லாம்உறுதுணைபுரிய வேண்டும்.