ஒருமுறையேனும்.: இராஜேந்திரன் சத்யா
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:33 PM
என் ஐம்பூத உலகினில் உலாவி வரும் உயிராய்....!!! என் நான்திசை பக்கமும் வளம் வரும் வாசமாய் ...!!!என் முப்பொழுதினிலும் முகம் பதிக்கும் பதுமையாய் ...!!! என் இரு கண்களின் கனவிலும் கடத்தி செல்லும் சோலையாய் ....!!!என் ஒற்றை இதயத்தை ஓயாமல் ஒலித்து, ஒளிந்திருக்கும் ஓவியமாய்....!!! காதலொழுக கதை பேசும் என் மனதிற்கு............அவள் உதடுகள் உதிர்த்த காதலை.... என் செவிகளும் பருகாதோ....... ஒருமுறையேனும்.......!!!