முகப்பு
கவிதைமணி

ஒருமுறையேனும்: கவிஞர் இரா. இரவி !

Updated On : 25 ஜூன், 2018 at 4:01 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:33 PM
ஒருமுறையேனும் இலங்கை இராணுவத்தை நமதுஇந்திய இராணுவம் சுடவேண்டும் என் ஆசை இது!மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின் வலையை அறுக்கிறான்மீனவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கி வருகிறான்!துப்பாக்கியால் காக்கா குருவியென சுடுகிறான்தலைகளைக் கண்டாலே தாவி ந்து தாக்குகிறான்!உயிரோடு திரும்பி வருவது மீனவர்களுக்குஉத்திரவாதம் இல்லாமல் போனது இலங்கையால் !தானம் தந்த கச்சத்தீவில் ஆதிக்கம் செய்கிறான்தத்தளிக்க விட்டு கொடூரமாக ரசித்து மகிழ்கிறான்!படகுகளைப் பறித்துக் கொண்டு விரட்டுகின்றான்பரிதவிக்க  விடுகிறான் பாவப்பட்ட மீனவர்களை!கடலுக்குள் ஏதடா எல்லை புரியவில்லை இலங்கைக்கு காற்று அடித்தால் கடந்து விடும் படகு அறியவில்லை!எல்லை தாண்டி வந்து பயங்கரவாதம் புரிகிறான்எல்லை மீறிய அடாவடித்தனம் செய்து வருகிறான்!தட்டிக் கேட்க யாருமில்லை இறுமாப்பு கொள்கிறான்தடியடியாவது நடத்துங்கள் இலங்கை இராணுவத்தை!தமிழக மீனவனும் இந்தியன்தான் உணருங்கள்தமிழனைக் காக்க இராணுவத்தை அனுப்புங்கள்!தமிழக மீனவன் மீது கை வைத்தால் இந்திய இராணுவம்தட்டிக் கேட்கும் என்ற பயத்தைக் காட்டுங்கள்!உலகமகா ரவுடியாக வலம் வரும் கொடூரன் இலங்கை இராணுவத்திற்கு பாடம் புகட்டுங்கள்!என் ஆசை என்றும் நிறைவேறாது தெரியும்ஒருமுறையேனும் இலங்கை இராணுவத்தைச் சுடுங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.