கவிதைமணி

ஒரு முறையேனும்: ஆபிரகாம் வேளாங்கண்ணி 

கவிதைமணி
ஆறுகளில் ஓடும் நீரால் தான் ஊர்களில் வாழும் வாழ்க்கை ஓடிக்கொண்டே இருந்தது இன்று ஆறுகளில் கழிவுகள் கலந்து ஆங்காங்கே தேங்கி நிற்பதால் ஊரார் வாழ்க்கையும் தேங்கியது ஜலதேவதையே தேங்கியோர் ஏங்கியோர் மேலோங்கி எழு "ஒரு முறையேனும்" நின்றன் கருணைக் கண்ணி யிரண்டை திறந்திட மாட்டாயா கார்மேகத்தை ஏவியெங்கள் தாகத்தை தணித்திடும் யோகத்தை அளித்திட வேண்டும் ஆவணம் செய்திடுவாய் தாயே அண்டை மாநிலத்தவரோடு நாளும் மண்டையை உருட்டி பலனேயில்லை தொண்டை வற்றியதே எஞ்சியதுஉரிமையை கெஞ்சிப் பெருவாரோ உரிமை மீறல்கள் போடுது வேஷம் அறிவு கவசம் உடுத்தி செய் துவசம் அஞ்சிடலில் பல னேது முண்டோபூக்கடையில் மீன்களை தேடுவதும் சாக்கடையில் பூக்களை தேடுவதும் நாவுக்கடியில் உமிழ்நீர் சுரந்தாலோசிலர் விழங்குவார் சிலர் உமிழ்வார்உமிழ்நீரை மட்டுமா வாய் பேசிடும் வார்த்தையையும் தான் அறியீரோ ஒரு முறையேனும் குறைத்தீருமா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT