கவிதைமணி

ஒருமுறையேனும்: சீர்காழி .ஆர்.சீதாராமன்

கவிதைமணி

வாழ்க்கையில் அக்கம்
பக்கம் தொட்டு நட்பு உறவு
பார்த்து பழகிவிடு மனிதாபி
மானத்தோடு ஒரு முறை

வெற்றிப் படிக்கட்டை தொடு
வீரநடை போடு தலை நிமிர்
வாழ்க்கை பயணத்தில் 
ஒரு முறையேனும் கால் பதி 

கசப்பு இனிப்பு இன்பம் 
துன்பம் சகலமும் தெரிந்து
கொள்ள ஒரு முறையேனும்
மிதித்து விடு காதல் படியை

மழலையை ரசிக்க அகம்
மகிழ்ந்து பார்க்க அணைக்க
விளையாடி கூடி மகிழ ஒரு
முறையேனும் பிற மனிதாக

காடு கழனி வரப்பு பசுமை
என சுற்றித் திரிந்து ரசி
மண்வாசனையை நுகர்
ஒரு முறையேனும்  வாழ்வில்

வேற்றுக்கிரகம் சென்று வா
பூமியின் தாய் மண்ணின்
பெருமையை உணர ஒரு
முறையேனும் பயணி நீ

தானம் சேவை அன்பு பாசம்
ஒரு முறையேனும் இவை
உன் வசம் வந்து மனம் வாசம்
வீச பழகிடு மனிதா வா

ஒரு முறையேனும்  நல்ல
மனிதனாய் வாழ முயற்சி
செய் எதிர்கால தேடல் உன்
பின்னால் வரும் என்கிற
நம்பிக்கையில் இன்று .....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT