கவிதைமணி

கருவில் தொலைந்த குழந்தை: கவிஞர் இரா. இரவி

கவிதைமணி
கருவில் இருப்பது பெண் என்று தெரிந்தால்கதையை முடிக்கும் அவலம் நடந்தது!கருவில் இருப்பது ஆணா? பெண்ணா என்பதைகருவுற்றோருக்கு அறிவிப்பது குற்றம் என்றானது!கருக்கலைப்பு கொஞ்சம் குறைந்து விட்டதுகருவிலேயே சிதைப்பது மடமை குற்றம்!பெரிய உயிரான அன்னைக்கும் ஆபத்துபெரிய உயிரும் பறிபோன நிகழ்வுகள் உண்டு!பெண்ணிற்கு சமஉரிமை தருவது இருக்கட்டும்பெண்ணிற்கு பிறக்க உரிமை தாருங்கள்!உருவான உயிரை உருக்குலைப்பது முறையோ?உணராமல் சிலர் குற்றம் புரிந்து வருகின்றனர்!ஆண்குழந்தை பெற்ற பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்பெண்குழந்தை பெற்ற எல்லோரும் சிறப்படைந்துள்ளனர்!ஆண்குழந்தையை ஒழுக்கமாக வளர்ப்பது கடினமானதுபெண்குழந்தையை ஒழுக்கமாக வளர்ப்பது எளிதானது!கல்வியிலும் பெண்குழந்தைகளே சிறந்து விளங்குகின்றனர்கடைசிவரை பாசம் பொழிவதும் பெண்குழந்தைகளே!திருமணமானதும் திரும்பிப் பார்ப்பதில்லை ஆண்திருமணமானாலும் என்றும் மறக்காதவள் பெண்!ஆணை வரவென்றும் பெண்ணை செலவென்றும்அறிவிலித்தனமாக பேசுவதை நிறுத்திடுங்கள்!உலக அரங்கில் சாதித்து வருகிறாள் பெண்உயர்வுகள் பல அடைந்து சிறக்கிறாள் பெண்!மதுவிற்கு அடிமையாகிறான் வளர்க்கும் ஆண்மகன்மதுவிற்கு அடிமையாவதில்லை வளர்க்கும் பெண்மகள்!பெற்றோர் பேச்சைக் கேட்டு நடப்பவள் பெண்மகள்பெற்றோர் பேச்சைக் கேட்டு நடப்பதில்லை ஆண்மகன்!கருவில் தொலைந்த குழந்தைகள் பல உண்டுகருவில் உருவான சிசுவை தொலைக்காமல் இருப்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

SCROLL FOR NEXT