கவிதைமணி

கருவில் தொலைந்த குழந்தை: கவிதா வாணி

கவிதைமணி

காட்டிலும் மேட்டிலும் ரோட்டிலும் 
கடவுளுனைக் காணக் - காத்திருந்தேன்
கண்கள் பூக்க,

கலைந்த கேசத்துடன் குலுக்கும் குவளை யுடன்
கார் கண்ணாடியைத் தொட்டுத் தடவி - 
உதவி கேட்டான் கண் மட்டும் இல்லாத - நண்பனொருவன்

கைப்பையை திறப்பதற்குள்
பச்சை விளக்கு ஒளிர - நான் நிதானிப்பதாய் - 
பின் வரிசை வாகனங்கள்- ஒலி வரிசையில் பிளிர -
நிறுத்தம் தாண்டி - காரை விட்டுத் தொடர்ந்தேன் - 

அவனுக்கு உதவ, 

அவனுக்கு அளித்த சிறு தொகையால் நான்
அகமகிழ்ந்து காருக்கு திரும்ப-
கார் பின் கண்ணாடி உடைந்திருந்தது - கைப்பையும் களவாடப்பட்டு,

நானோ- கருவில் தொலைந்த குழந்தையாய் தெருவில் நின்றிருந்தேன்
செய்வதறியாது .

உன் குத்தமா - என் குத்தமா
யார இங்கு சொல்ல?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

ரஜினி - 173 படப்பிடிப்பு எப்போது?

தில்லி விமானத்தில் என்ஜின் கோளாறு! அவசர தரையிறக்கம்!

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

SCROLL FOR NEXT