கவிதைமணி
யார் இட்ட சாபம்: கா. மகேந்திரபிரபு
விவசாயம் செழித்த விவசாயநாட்டில் வினோத வறட்சி யார் இட்ட சாபம் ?மத வெறிகொண்ட மனிதமற்ற மனிதர்கள் கூட்டம் யார் இட்ட சாபம் ?சாதிக் கொடுமை கொண்டு ஆடும் சாதிச்சங்கங்கள் யார் இட்ட சாபம் ?கல்வி வியாபாரமாகி ஊழலில் திளைத்து கல்வித்தரம் தாழ்ந்தது யார் இட்ட சாபம் ?அரசு வேலைக்கு லஞ்சம் சில லட்சங்கள் அரசு வேலைக்கு விலை யார் இட்ட சாபம் ?எளியோர்க்கில்லையா அரசு வேலை என்று தீரும் இந்த தாகம் யார் இட்ட சாபம் ?பணமுதலைகளின் கைப்பாவையாக அரசுகள் யார் மக்களை காப்பார் ? யார் இட்ட சாபம் ?