கவிதைமணி

என்றும்  என்  இதயத்தில்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி

கவிதைமணி

ஜெய்ப்பூர் கற்களாய்
ஜொலிக்கும் முகம் –
உன் கண்களில்

எத்தனை கானங்கள் –
பார்வையில் தாகம் பார்த்திருக்கிறேன்
ராகம் காண்கிறேன் இன்று –

பற்களில் பதுக்கிய
ரேடியம் – குழப்பத்தில் பியரி க்யூரி--
சொர்க்கம் தெரிந்ததால்
உன் சொற்களில்
பொருள் தேடியதில்லை –
இளம்பூவாய் தொடத்தூண்டும்
உதடுகள் – பின்
சாயம் எதற்கு ? இருக்கட்டும் --
எனக்குத்தெரியும்

என்றுமே நீ உன் மனதிற்கு
சாயம் பூசியதில்லை—
என் அகவரியில்
உன் முகவரி பதித்து
என் தலையெழுத்தை சுகவரிகளாய்
மாற்றியவளே !!
உனக்காக,
நீ வந்து அமர ,
என்றுமே என் இதயத்தில்
நான்கு அறைகள் !!  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய பாரா தடகளப் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரிக்கை

மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞா் கைது: மூவா் காயம்

நீலகிரியில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு: 5,47,133 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்

திருச்செந்தூா் மாசித் திருவிழா 3ஆம் நாள்: குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT