கவிதைமணி

என்றும் என் இதயத்தில்: கவிஞர் டாக்டர். இராஜலட்சுமி இராகுல்

கவிதைமணி
சில நேரம் சண்டைகள்சில நேரம் ஊடல்கள்;கலையாத காதலுடன்விளையாடும் தருணங்கள்..தொலைதூரம் சென்றாலும்துணையாகும் நினைவுகள்;அருகாமை வந்தவுடன்அழகாகும் தருணங்கள்...மௌனத்தில் முத்தங்கள்முத்தத்தின் சத்தங்கள்...மொழியேதும் இல்லாமல்உரையாடும் நிமிடங்கள்; மதுவுண்ட மயக்கத்தில்மலர்மீது இளைப்பாறும்சிறுவண்டு அதுபோலுன் மடிமீது தூக்கங்கள்...மாற்றமே வையகத்தில்நிரந்தரம் எனும் நியதிஏற்றமும் தாழ்மையும்வாழ்க்கையின் ஒரு பகுதி;ஆண்டுகள் உருண்டோடும்அகவையும் பல கூடும்இளமையும் முதுமையாய்மாறும்நாள் வரக்கூடும்எதுவந்த போதிலும்எவர்சென்ற போதிலும்விதிநமக்குப் பலவற்றைவினைத்திட்ட போதிலும்வென்றாலும் தோற்றாலும்கொன்றாலும் எந்நாளும்குன்றாத அன்புடையஅன்றிலின் காதல்போல் என்றும் என் இதயத்தில் இன்று போல் நீங்காமல்துடிப்பாக நீயும் - உன்துணையாக நானும் ...                               

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT