கவிதைமணி

என்றும் என் இதயத்தில்: பாவலர். இராம இளங்கோவன்

கவிதைமணி
வானத்தை விற்பனைக்கு      விலைபேசி விற்கின்றார்; கானலையும் தண்ணீராய்      காசுக்கு விற்கின்றார்; ஆனவரை பணத்திற்காய்       அடிமையாகி போகின்றார்; ஈனரிவர் செயல்யாவும்       என்றும்என் இதயத்தில்! அழுக்கெல்லாம் மேகமாக        அழுதிடவே  துடிக்கிறது; வழுக்குகிற பாசிகளோ         வழுக்கிவிழ  செய்கிறது;அழுதிடவே பிறந்தவர்போல்          உழவரவர்  அழுகின்றார்; எழுச்சியின்றி துயரெல்லாம்          என்றும்என் இதயத்தில்! கல்விக்கோர் விலையென்று     கலவிக்கோர் விலையென்றுபுல்லர்க்கோர் விலையென்று     நல்லோர்க்கோர் விலையென்றுஎல்லோர்க்கும் விலைவைத்து      எளியோரை வதைக்கின்றார்; எல்லாமே ஈரமாக      என்றும்என் இதயத்தில்! மாறாத வடுவாகி      மனிதமற்ற செயல்களாலே தீராத கொடுமையாகி      தினந்தோறும் துடிப்பதாலே ஆராத புண்ணாகி       அன்றாடம் ஏக்கமுண்டு;ஏறாத வாழ்வெண்ணி       என்றும்என் இதயத்தில்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய பாரா தடகளப் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரிக்கை

மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞா் கைது: மூவா் காயம்

நீலகிரியில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு: 5,47,133 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்

திருச்செந்தூா் மாசித் திருவிழா 3ஆம் நாள்: குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT