நாள்தோறும் நம்மாழ்வார்

நம்மாழ்வார் முதற்பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 4

அவன், இவன், உவன் என்கிற உயர்திணை

செ.குளோரியான்

நாம், அவன், இவன், உவன், அவள், இவள், உவள், எவள்,
தாம், அவர், இவர், உவர், அது, இது, உது, எது,
வீம் அவை, இவை, உவை அவை நலம், தீங்கு, அவை
ஆமவை ஆயவையாய்நின்ற அவரே.

நாம் என்று சொல்லப்படுகிறவை, அவன், இவன், உவன் என்கிற உயர்திணை ஆண்பால் பொருள்கள், அவள், இவள், உவள், எவள் என்கிற உயர்திணைப் பெண்பால் பொருள்கள், தாம், அவர், இவர், உவர் என்கிற உயர்திணைப் பலர்பால் பொருள்கள், அது, இது, உது, எது என்கிற அஃறிணை ஒன்றன்பால் பொருள்கள், அழிகின்ற அவை, இவை, உவை என்கிற அஃறிணைப் பலவின்பால் பொருள்கள் என அனைத்தும், அவை நல்லவையாக இருந்தாலும் சரி, தீயவையாக இருந்தாலும் சரி, உண்டாகும் பொருள்களாக இருந்தாலும் சரி, உண்டான பொருள்களாக இருந்தாலும் சரி, அனைத்தாகவும் நிற்பவன் எம்பெருமானே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அபார வெற்றி - புகைப்படங்கள்

டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா சாதனை!

எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க ரூ. 82 கோடி தேவையா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT