நாள்தோறும் நம்மாழ்வார்

இரண்டாம் பத்து பத்தாம் திருமொழி - பாடல் 5, 6

வளம் நிறைந்த சுனைகளால்

செ.குளோரியான்

திறம்உடை வலத்தால் தீவினை பெருக்காது
அறம் முயல் ஆழிப் படையவன் கோயில்
மறுஇல் வண்சுனைசூழ் மாலிருஞ்சோலைப்
புறமலை சாரப்போவது கிறியே.

பலவகை வலிமைகளைக்கொண்டு தீவினைகளைப் பெருக்காதீர்கள், குற்றமில்லாத, வளம் நிறைந்த சுனைகளால் சூழப்பட்ட திருமாலிருஞ்சோலைக்குப் பக்கத்திலுள்ள மலையை நெருங்கிச் செல்லுங்கள், அறத்தை நிலைநாட்டுகிறவன், சக்ராயுதத்தைக் கையில் ஏந்தியவன், எம்பெருமான் அங்கே கோயில்கொண்டுள்ளான், (அவனை வணங்குங்கள்,) அதுவே உங்களுக்குச் சிறந்த வழி.

***

பாடல் - 6

கிறிஎன நினைமின் கீழ்மை செய்யாதே
உறிஅமர் வெண்ணெய் உண்டவன் கோயில்
மறியொடு பிணைசேர் மாலிருஞ்சோலை
நெறிபட அதுவே நினைவது நலமே.

கீழ்த்தரமான விஷயங்களில் ஈடுபடாதீர்கள், நான் இப்போது சொல்லப்போகும் வழியை எண்ணிப்பாருங்கள், குட்டியோடு பெண்மான் வாழ்கிற திருமாலிருஞ்சோலையிலே, உறியிலே உள்ள வெண்ணெய்யை உண்ட எம்பெருமான் கோயில்கொண்டிருக்கிறான், அங்கே செல்லும் வழியை நினையுங்கள், அதுவே உங்களுக்கு நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT