நாள்தோறும் நம்மாழ்வார்

ஐந்தாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 11

ஒளி நிறைந்த

செ.குளோரியான்

பாடல் - 11

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன் அடியார்க்கு
                                                                        அருள்செய்யும்
மலியும் சுடர் ஒளி மூர்த்தி, மாயப்பிரான் கண்ணன்
                                                                        தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசு அறுக்கும்மே.


கலியுகத்தால் வருகிற துன்பங்களெல்லாம் தன்னுடைய அடியவர்களுக்கு இல்லாதபடி அருள்செய்கிற எம்பெருமான், சுடர் ஒளி நிறைந்த மூர்த்தி, மாயப்பிரான், கண்ணன், அவனுடைய புகழை, நிறைந்த வயல்கள் சூழ்ந்த, தென் திசையிலுள்ள திருக்குருகூர்க் காரிமாறன் சடகோபன் ஆயிரம் பாடல்களில் ஒலிச்சிறப்போடு பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் பாடினால், உள்ளத்தில் உள்ள குற்றங்கள் அறுந்துபோகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT