நாள்தோறும் நம்மாழ்வார்

எட்டாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

ஆண் சிங்கம்

செ.குளோரியான்

பாடல் 3

அருள்தான் இனி யான் அறியேன், அவன் என்னுள்
இருள்தான் அற வீற்றிருந்தான், இது அல்லால்
பொருள்தான் எனின் மூ உலகும் பொருள் அல்ல,
மருள்தான் ஈதோ, மாய மயக்கு மயக்கே.

எம்பெருமான் எனக்குள் வீற்றிருக்கிறான், என்னுடைய அகத்து இருள் போகும்படி செய்கிறான், இதைக்காட்டிலும் மூவுலகங்களையும் அவன் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. பக்தன்மீது பெருமானுக்கு இப்படியோர் அன்பா? இது நிஜமா? வெறும் மருள்காட்சியா? பெரும் மாய மயக்காக உள்ளதே.எம்பெருமானின் இத்தகைய அருளைத்தவிர வேறு எதையும் நான் அறியேன்.


பாடல் 4

மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து,
ஆயன், அமரர்க்கு அரி ஏறு, எனது அம்மான்,
தூய சுடர்ச்சோதி தனது என்னுள் வைத்தான்
தேயம் திகழும் தன் திருவருள் செய்தே.

ஆயன், அமரர்களுக்குத் தலைவனான உயர்ந்த ஆண் சிங்கம், என்னுடைய அம்மான், ஒளிமயமான தன் திருவருளாலே, தன்னுடைய தூய சுடர்ச்சோதியை எனக்குள் வைத்தான், அவன் என்னை ஒருபோதும் வஞ்சிப்பதோ, மயக்குவதோ இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT