நாள்தோறும் நம்மாழ்வார்

எட்டாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

நின்றான் எம்பெருமான்

செ.குளோரியான்

பாடல் 5

திகழும் தன் திரு அருள் செய்து உலகத்தார்
புகழும் புகழ்தான் அது காட்டித்தந்து என்னுள்
திகழும் மணிக்குன்றம் ஒன்றே ஒத்துநின்றான்
புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே.

ஒளிவீசும் தன்னுடைய திருவருளை எனக்குச் செய்து, உலகத்தவர் என்னைப் புகழுகின்ற புகழையும் எனக்குக் காட்டித்தந்து, எனக்குள்ளே ஒளிவீசும் மணிக்குன்றைப்போல நின்றான் எம்பெருமான், இதைத்தவிர வேறுவிதமாக நான் அவனைப் புகழவேண்டுமோ!


பாடல் 6

பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்
தருமேல் பின்னை யார்க்கு அவன் தன்னைக் கொடுக்கும்?
கருமாணிக்கக் குன்றத்துத் தாமரைபோல்
திருமார்பு, கால், கண், கை, செவ்வாய், உந்தியானே.

கருமாணிக்கக் குன்று ஒன்றில் தாமரை பூத்ததுபோல் திருமார்பு, திருக்கால்கள், திருக்கண்கள், திருக்கைகள், சிவந்த திருவாய், திருவுந்தியைக்கொண்ட எம்பெருமான், எத்தனையோ சிறந்த பேறுகளில் ஒன்றை எனக்குத் தந்தான், அப்படியானால், அனைத்திலும் சிறந்தவனாகிய தன்னை அவன் யாருக்குத் தருவான்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT