நாள்தோறும் நம்மாழ்வார்

எட்டாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

ஆத்மாவை எம்பெருமான்

செ.குளோரியான்


பாடல் 5

நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு
அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரல் ஆகாது,
உணர்ந்தும் மேலும் காண்பு அரிது,
சென்று சென்று பரம் பரமாய்
யாதும் இன்றித் தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய்
நன்றாய் ஞானம் கடந்ததே.

நிலையாக நின்ற ஆத்மாவை எம்பெருமான் எனக்குக் காட்ட, நான் அதை உணர்ந்தேன். அதன் நுட்பமான தன்மை அப்படிப்பட்டது, இப்படிப்பட்டது என யாராலும் உணர இயலாது, ஒருவேளை உணர்ந்தாலும், அதனை மேலும் காண இயலாது. ஒன்றுக்கொன்று மேம்பட்டுச் சென்று, எதுவும் இல்லாதபடி தேய்ந்து அழிந்து, (மற்ற உலக விஷயங்களைப்போல்) நல்லது, தீயது என அறிந்துகொள்வதற்கு இயலாத, அரிய ஒன்றாக, ஞானங்களால் எட்ட இயலாதபடி அவற்றைக் கடந்து அது நன்றாக நின்றது.

பாடல் 6

நன்றாய் ஞானம் கடந்துபோய்
நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து
ஒன்றாய்க் கிடந்த அரும் பெரும் பாழ்
உலப்பு இல் அதனை உணர்ந்து உணர்ந்து
சென்று ஆங்கு இன்ப துன்பங்கள்
செற்றுக் களைந்து பசை அற்றால்
அன்றே அப்போதே வீடு,
அதுவே வீடு வீடாமே.

ஆன்மாவானது, முதலில் இந்திரியங்களின் இன்பங்களைக் கடந்துசெல்லவேண்டும், அவற்றோடு பிணைந்துள்ள அரிய, பெரிய, வலுவான, அழிவில்லாத பிரகிருதி என்னும் உலகத்தத்துவத்தை உணரவேண்டும், ஆன்மாவின் இயல்பை உணரும்வரை செல்லவேண்டும், அங்கே இன்ப துன்பங்களுக்குக் காரணமான பாவ, புண்ணியங்களை நீக்கவேண்டும், அவற்றின் பசையும் இல்லாதபடி முழுமையாக அகற்றவேண்டும், அவ்வாறு அகற்றினால், அன்றைக்கே, அப்போதே உலகியல் அனுபங்களிலிருந்து ஆன்மா விடுபடும்; வீடுபேறு அனுபவத்தைப் பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT