நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 1

ஐம்பூதமாகவும் நின்றவன்

செ.குளோரியான்


பாடல் 1

சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்,
கார்மேகவண்ணன், கமல நயனத்தன்,
நீர், வானம், மண், எரி, காலாய் நின்ற நேமியான்,
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே.

கார்மேகவண்ணன், தாமரைபோன்ற திருக்கண்களையுடையவன், நீர், வானம், மண், நெருப்பு, காற்று என ஐம்பூதமாகவும் நின்றவன், சக்ராயுதத்தை ஏந்தியவன், தன்னுடைய பெயரை வானவர்கள் சொல்லும் பெருமையுடையவன், எம்பெருமான், அத்தகைய தாமோதரனின் திருவடிகள் பக்திநெறிக்கு ஏற்றவை, அவனை வணங்கி அத்திருவடிகளை நாம் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்!

காரங்காடு தூய செங்கோல் மாதா தேவாலயத்தில் சிலுவைப் பாதை வழிபாடு

விபத்தில் கால்களை இழந்த வேலூா் விளையாட்டு வீரருக்கு அரசுப்பணி!

மருத்துவக் கட்டமைப்பு வசதிகளால் கிராமப்புற மக்களும் பயன்! - அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

SCROLL FOR NEXT