நாள்தோறும் நம்மாழ்வார்

எட்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 11

குளிர்ந்த திருத்துழாய்

செ.குளோரியான்


பாடல் - 11

எங்கே காண்கேன் ஈன் துழாய்
அம்மான்தனை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால்
அம் தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன ஆயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண இப்பிறப்பே
மகிழ்வர் எல்லியும் காலையே.

குளிர்ந்த திருத்துழாய் மாலையை அணிந்த அம்மானை நான் எங்கே காண்பேன் என்று எம்பெருமானிடம் ஈடுபட்டவர், அந்த இறை அனுபவத்தின் சொற்களாலே அப்பெருமானைப் பாடிய அழகிய, குளிர்ந்த குருகூர்ச் சடகோபன், அவர் சிறப்பாகச் சொன்ன ஆயிரம் திருப்பாடல்களிலே இந்தப் பத்து பாடல்களையும் சொல்ல வல்லவர்கள் இந்தப் பிறப்பிலேயே, இங்கேயே எல்லாரும் காணும்படி இரவும் பகலும் எம்பெருமானை அனுபவித்து மகிழ்வார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT