நாள்தோறும் நம்மாழ்வார்

எட்டாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

தலைசிறந்த இடங்கள்

செ.குளோரியான்


பாடல் - 7

கொள்மின் இடர்கெட உள்ளத்துக் கோவிந்தன்
மண், விண் முழுதும் அளந்த ஒண் தாமரை,
மண்ணவர்தாம் தொழ வானவர் தாம் வந்து
நண்ணு திருக்கடித்தான நகரே.

பூமியிலே வாழ்கிறவர்கள் தொழ, வானத்துத் தேவர்களெல்லாம் வந்து சேர்கின்ற திருக்கடித்தான நகரிலே, மண், விண் முழுவதையும் அளந்த கோவிந்தனின் ஒளிவீசும் தாமரைத் திருவடிகளை உள்ளத்தில் கொள்ளுங்கள், துன்பங்கள் யாவும் நீங்கும்.


பாடல் - 8

தான நகர்கள் தலைசிறந்து எங்கு எங்கும்
வான், இந்நிலம், கடல் முற்றும் எம் மாயற்கே,
ஆன இடத்தும் என் நெஞ்சும் திருக்கடித்
தான நகரும் தன தாயப் பதியே.

வானிலும், இந்த நிலத்திலும், கடல்முழுவதும் எங்கு பார்த்தாலும் நம் மாயனுக்கு ஏற்ற தலைசிறந்த இடங்கள் பலப்பல உள்ளன. ஆனாலும், அப்பெருமான் தனக்கே உரிய தாய இடங்களாகக் கருதுபவை, என் நெஞ்சையும் திருக்கடித்தானத்தையும்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT