9. முளைக்கதிர் இளம்பிறை - பாடல் 2
கிழிக்கப்பட்ட: மான், புலி, யானை ஆகிய விலங்குகளின் தோல் என்றும், கிழிக்கப்பட்ட கோவண ஆடை என்றும் இரண்டு விதமாக பொருள் கூறுவார்கள்.
ஏறினர் ஏறினை ஏழை தன்னொரு
கூறினர் கூறினர் வேதம் அங்கமும்
ஆறினர் ஆறிடு சடையர் பக்கமும்
Advertisement
கீறின உடையினர் கெடில வாணரே
</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">கீறின = கிழிக்கப்பட்ட: மான், புலி, யானை ஆகிய விலங்குகளின் தோல் என்றும், கிழிக்கப்பட்ட கோவண ஆடை என்றும் இரண்டு விதமாக பொருள் கூறுவார்கள். ஏறு = காளை மாடு: ஏழை = பார்வதி தேவி: பொதுவாக ஆண்களை விடவும் பெண்கள் உடல் வலிமையில் குன்றியவர்கள் என்பதால் பெண்களை ஏழைகள் என்று கூறுவது இலக்கிய மரபு.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">காளை மாட்டினை வாகனமாகக் கொண்டவர் சிவபெருமான்: அவர் பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டவர்; வேதங்களையும் வேதங்களின் ஆறு அங்கங்களையும் மற்றவர்களுக்கு விரித்து கூறியவர்: கங்கை ஆற்றினை தனது சடையில் நிறுத்தியவர்: கிழிந்த கோவண ஆடையினை உடையவர்: மேற்கண்ட தன்மைகளை உடைய பெருமான் தான் கெடில வாணராக திருவதிகை வீரட்டத்தில் உறைகின்றார்.</p>