9. முளைக்கதிர் இளம்பிறை - பாடல் 9
நறுமணம் வீசும்: பொறியுறு = புள்ளிகளை உடைய: நெறியுறு = சுருள்களை உடைய: கிறிபட = தந்திரமாக உழிதரல்
வெறியுறு விரிசடை புரள வீசியோர்
பொறியுறு புலியுரி அரையது ஆகவும்
நெறியுறு குழல் உமை பாகமாகவும்
கிறிபட உழி தர்வர் கெடில வாணரே
</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">வெறியுறு = நறுமணம் வீசும்: பொறியுறு = புள்ளிகளை உடைய: நெறியுறு = சுருள்களை உடைய: கிறிபட = தந்திரமாக உழிதரல் = ஆடுதல்: தந்திரமாக நடனம் ஆடினார் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவதால், இந்த பாடல் தாருகவனத்து மகளிர் காண ஆடிய நடனக் காட்சியோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">நறுமணம் கமழ்கின்ற விரிந்த சடை அவிழ்ந்து தரையில் புரளுமாறும், இடுப்பினில் புள்ளிகள் உடைய புலித்தோல் ஆடையாகவும், சுருண்ட கூந்தலை உடைய உமையம்மை தனது உடலின் ஒரு பாகமாகவும் இருக்கும் கோலத்தில் கெடில வாணர் மாயக் கூத்து ஆடுகின்றார்.</p>