2. கூற்றாயினவாறு - பாடல் 9
உமது கருணையின் திறத்தை அறியாததால், தெளியாத நிலையில் உள்ளனர்.
பொன் போல மிளிர்வதோர் மேனியினீர் புரிபுன் சடையீர் மெலியும் பிறையீர்
துன்பே கவலை பிணி என்று இவற்றை நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்
என் போலிகள் உம்மை இனித் தெளியார் அடியார் படுவது இதுவே ஆகில்
அன்பே அமையும் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே
<br /><br /><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">மெலியும் பிறை = தேய்ந்து ஒரு கலையுடன் நின்ற சந்திரன்</p><p align="JUSTIFY">புரிசடை = சுருண்ட சடை</p><p align="JUSTIFY">புன்சடை = செம்பட்டை நிறத்தில் உள்ள சடை</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">பொன் போன்ற மேனியை உடையவரும், சுருண்டு செம்பட்டை நிறத்தில் உள்ள சடையினை உடையவரும், மெலிந்த நிலையில் தன்னைச் சரண் அடைந்த சந்திரனுக்கு அபயம் அளித்து அவனுக்கு வாழ்வு அளித்தவரும் ஆகிய சிவபெருமானே, கொடிய சூலை நோயினால் எனக்கு ஏற்பட்டுள்ள துன்பம், கவலை ஆகியவற்றைக் களைந்து அருள்புரிவீராக. என்னைப் போன்றவர்கள், உமது கருணையின் திறத்தை அறியாததால், தெளியாத நிலையில் உள்ளனர். கவலைகள் மற்றும் துன்பங்களால் கட்டுண்டு இருக்கும் அடியார்களின் கவலைகளை, துன்பங்களை நீக்கினால், அவர்களும் தெளிவு அடைவார்கள். உலகெங்கும் அன்பே நிலவும்.</p>