முகப்பு
தினம் ஒரு தேவாரம்

27. நன்று நாள் தொறும் - பாடல் 1

தில்லைத் தலத்தில், கூத்த பிரானின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்த அப்பர் பிரான் பல பதிகங்கள் பாடியும் உழவாரப் திருப்பணிகள் செய்தவாறும் அங்கே இருந்த நாட்களில்,

Updated On : 6 ஜூன், 2016 at 3:01 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:56 PM

(வேட்களம் – குறுந்தொகை)

முன்னுரை

தில்லைத் தலத்தில், கூத்த பிரானின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்த அப்பர் பிரான் பல பதிகங்கள் பாடியும் உழவாரப் திருப்பணிகள் செய்தவாறும் அங்கே இருந்த நாட்களில், இடையே வேட்களம் மற்றும் கழிப்பாலை தலங்கள் சென்று பதிகங்கள் அருளியதாக பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். காவியங்கண்டர் = நீல மலர் போன்ற நிறத்தில் அமைந்த கழுத்தினை உடைய சிவபெருமான். இந்த உலகத்தில் உள்ளவர்கள் உய்வதற்காக அப்பர் பிரான் பதிகங்கள் அருளினார் என்பதை உணர்த்தும் பொருட்டு, மண்ணோர் வாழ நண்ணினார் என்று சேக்கிழார் கூறுகின்றார்.

Advertisement

மேவிய பணிகள் செய்து விளங்குநாள் வேட்களத்துச்
சேவுயர் கொடியார் தம்மைச் சென்று முன் வணங்கிப் பாடிக்
காவியங்கண்டர் மன்னும் திருக்கழிப்பாலை தன்னில்
நாவினுக்கரசர் சென்று நண்ணினார் மண்ணோர் வாழ

பாடல் 1

நன்று நாள் தொறும் நம் வினை போய் அறும்
என்றும் இன்பம் தழைக்க இருக்கலாம்
சென்று நீர் திருவேட்களத்து உள்ளுறை
துன்று பொற்சடையானைத் தொழுமினே

</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">துன்று = நெருங்கிய, அடர்ந்த.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">திருவேட்களம் சென்று அங்கே உறைகின்ற இறைவனை, அடர்ந்ததும் பொன் போன்ற நிறத்தில் உள்ளதும் ஆகிய சடையை உடைய பெருமானை, நீங்கள் தொழுவீர்களாக. அவ்வாறு தொழுதால், உங்களுக்கு நாள்தோறும் நன்மையே உண்டாகும்; மேலும் உங்களது வினைகள் அறுந்து தொலையும்; உங்களது வாழ்வினில் என்றும் இன்பம் தழைக்க நீங்கள் வாழ்வினில் உய்வினை அடையலாம்.</p><p align="JUSTIFY"> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.