27. நன்று நாள் தொறும் - பாடல் 4
தன்னைச் சரணடைந்த சந்திரன் நிறைந்து விளங்குமாறு, சந்திரனைத் தனது சடையில் சூடிய மணாளனும்,
பாடல் 4
அல்லல் இல்லை அருவினை தான் இல்லை
மல்கு வெண்பிறை சூடும் மணாளனார்
செல்வனார் திருவேட்களம் கை தொழ
வல்லர் ஆகில் வழியது காண்மினே
<strong><br />விளக்கம்</strong></p><p align="JUSTIFY">அல்லல் = பிறவியால் ஏற்படும் துன்பங்கள். அருவினை = நீக்குதற்கு அரிய வினைகள். மல்கு = நிறைந்து விளங்குதல். செல்வனார் = முக்திச் செல்வத்தை உடைய செல்வர்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">தன்னைச் சரணடைந்த சந்திரன் நிறைந்து விளங்குமாறு, சந்திரனைத் தனது சடையில் சூடிய மணாளனும், முக்தி எனப்படும் அழிவில்லாத செல்வத்தை உடைய செல்வரும் ஆகிய திருவேட்களத்து இறைவனைத் தங்களது கையால் தொழுது வணங்க வல்ல அடியார்களுக்கு, இந்த பிறவி எடுத்ததால் ஏற்படும் துன்பங்களும் இல்லை, அவர்களை, அந்நாள் வரை பிரிக்க முடியாதபடி பிணைத்திருந்த வினைகளும் அவர்களை விட்டு நீங்கிவிடும். எனவே வேட்களம் சென்று பெருமானை கைதொழுது உய்வதே சிறந்த வழி என்பதை உணர்ந்து செயல்படுவீராக.</p>
Advertisement