38. மாது இயன்று மனைக்கு - பாடல் 8
சிவபெருமான் பேரில் தீராத காதல் கொள்ளும்
பாடல் 8
உறவு பேய்க்கணம் உண்பது வெண்தலை
உறைவது ஈமம் உடலிலோர் பெண்கொடி
துறைகள் ஆர் கடல் தோணிபுரத்துறை
இறைவனார்க்கு இவள் என் கண்டு அன்பாவதே
விளக்கம்
Advertisement
தனது மகள் சிவபெருமான் பேரில் தீராத காதல் கொள்ளும் அளவுக்கு, சிவபெருமானின் எந்த அம்சம், தனது பெண்ணின் கருத்தினைக் கவர்ந்தது என்பதை யோசித்துப் பார்க்கும் தாய்க்கு, சிறப்பான அம்சமாக எதனையும் உணர முடியவில்லை. எதனைக் கண்டு தனது பெண் சிவபிரான் பால் அப்பர் நாயகி காதல் கொண்டாள் என்று வியக்கும் பாடல். ஈமம் = சுடுகாடு.
பொழிப்புரை
சிவபெருமானின் உறவுகளாக, அவனை எப்போதும் சூழ்ந்து இருப்பன பேயக்கணங்கள்; அவனது உண்கலனோ, உலர்ந்த மண்டையோடு; அவனது இருப்பிடமோ சுடுகாடு;. அவனது உடலில் ஒரு பாகத்தில் இருப்பதோ பார்வதி. இவ்வாறு காணப்படும் சிவபெருமான்தான், சிறந்த துறைமுகமாக விளங்கும் தோணிபுரத்து இறைவர். இவரிடம் உள்ள எந்த அம்சத்தை பெருமையாக கருதி எனது பெண் அவர் மீது தீராத காதல் கொண்டுள்ளாள்.