39. வெள்ளெருக்கு அரவம் - பாடல் 6
மேரு மலையினை வில்லாக வளைத்து,
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:54 PM
பாடல் 6
குற்றம் இல்லியை கோலச் சிலையினால்
செற்றவர் புரம் செந்தழல் ஆக்கியைப்
புற்று அரவனை புள்ளிருக்குவேளூர்
பற்ற வல்லவர் பாவம் பறையுமே
விளக்கம்
Advertisement
கோலச் சிலை = அழகிய மலை.
பொழிப்புரை
குற்றங்கள் ஏதும் இல்லாதவனும், அழகிய மேரு மலையினை வில்லாக வளைத்து, தேவர்களுக்கு பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் நெருப்பினால் பற்றி எரியுமாறு செய்தவனும், புற்றில் வாழும் பாம்பினைத் தனது உடலில் அணிந்தவனும் ஆக்கிய புள்ளிருக்குவேளூர் இறைவனைப் பற்றும் வல்லமை படைத்தவர்களின் பாவங்கள் கெட்டுவிடும்.